Monday, May 5, 2008

ஏனிந்த வேறுபாடு ...?

உன்னை நினைக்கும் நொடிகள் ...
மனதிற்குள் ஒரு மயக்கம் !
நீ பேசுவதாய் நினைத்து சிற்சில ஒத்திகைகள் எப்போதும்...

உன்னை ரகசியமாய் எனக்கு வெளிப்படுத்தும் நொடிகள்...
மனதிற்குள் ஒரு மயக்கம் !
நீ அருகே இருப்பாய் என்றெண்ணி காற்றை சிறைபடுத்தும் கைகள் எப்போதும்...

உன்னை அருகில் பார்க்கும்போது மட்டும்...
மயக்கத்தை விடுத்து சிலுப்பி நிற்கின்றதே நன்றிகெட்ட மனம்!
எனையறிந்த மனம்தானே என்ற நினைப்போ...

உன்னை விட்டு தூரமாய் வரும் நொடிகள்...
மறுபடி ஏங்குதே மனம்!
மீண்டும் உனை காணும் நொடிகளை எண்ணி !...

No comments: