Monday, May 5, 2008

புரிந்துகொள்வாயா..?

புரிந்துகொள்வாயா..? உன் கோபம் எனை தடுமாற வைக்கின்றதை !

புரிந்துகொள்வாயா..? உன் ஸ்பரிசம் எனை எனக்கு உணர வைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் அருகாமையை நான் பொக்கிஷமாய் நினைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் சீண்டல்கள் எனை சிரிக்க வைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் சிறிய பிரிவுகளும் எனை சோகமாக்குவதை !
புரிந்துகொள்வாயா..? உன் வார்த்தைகள் எனக்குள் மாற்றம் உண்டாக்குவதை !
புரிந்துகொள்வாயா..? உன் நட்பு இல்லாமல் போனால் எனக்கு என்னாகும் என்பதை !

No comments: