Wednesday, October 15, 2008

நட்பு..!

நட்பெனும் அழகோவியம் !

சந்தேகமெனும் ஆயுதம் !

பரிவெனும் நெஞ்சம் !

என்றென்றும் ஏங்கும் !

அறிந்தாலும் பிரிவோம் !

என்றேனும் சந்திப்போம் !

இதயம் புரியும் !

Monday, October 13, 2008

வருவாயோ..!!

முகம் திருப்பி போகும் நீ !

திரும்பாமலே நான் !

உணர்ந்து திரும்பும் நேரம் !

உனக்காய் காத்திருக்கும் மனம் !

உறவுகள் வெட்டாதிருக்க ! காலன் வராதிருக்க !

காதல் ...!!

விரல் சொடுக்கும் கணம் !

உரைத்தேன் என் மனதின் கனம் !

மறைத்தால் மன்னிக்காது என் மரணம் !

உணர்ந்து பிரிந்தால் போதும் என்ற மனம்!

உரைத்தது ஏன் என்றே துடிக்குது கணமும்

மனதில்...!!

மனதில் உன் முகம் !

விரலில் உன் ஸ்பரிசம் !

நினைவில் உன் புன்னகை !

கண்களில் உன் உருவம் !

நினைத்து நினைத்து பார்க்கும் ;

உணரவில்லை உன் பிரிவை !

எனது நெஞ்சம் எப்போதும் என்னோடு நீ !! ....

நீ வேண்டும்..!!

உயிர் பிரியும் நேரம் !

உன் அருகாமை வேண்டும் !

தூர நின்று பார்ப்போயோ !?

தோளில் தாங்கி துடிப்பாயோ !?

உனக்குள் நான் ! எனக்குள் நீ ! யாரறிவார்?!!

Saturday, August 30, 2008

நீ...!!

உடல் சிலிர்க்கும் உனை நினைத்தால்!

கனவு துளிர்க்கும் உனை நினைத்தால்!

புன்னகை மிளிரும் உனை நினைத்தால்!

உனை நினைத்துக்கொண்டே இருந்தால்!

உலகமே என் இமைக்குள் சுழலும்!

மனமே...!!

மனதில் காதல் வளர்த்து!

கண்களில் ஏக்கம் வளர்த்து!

வார்த்தைகளில் இதம் வளர்த்து!

உணர்வுகளை கூற உன்னருகே நான் வர!

புன்னகையுடன் அழைத்தாய் உன் திருமணத்திற்கு!

Monday, May 5, 2008

கனவிலும் நீ..!!

தனித்திருக்கும் இரவுகளில்...
நீளும் உன் நினைவுகள்...
இழுத்தணைத்த கரங்களில் விடுபடாமலேயே சிணுங்கும் நீ !

காதோரம் உரசும் செவ்விதழ்களை
துரத்திப்பிடித்துமுழுதாய் உனை வரிந்து கொள்ள முயல்கையில்;
எப்படியும் கலைந்து விடுகிறது கனவு...!!

எனக்குள் நீ...

உறவாய் இருப்பாய் என்று நினைக்கவில்லை!
உயிர் பிரியும் நேரத்தில் அருகிலிருப்பாய் என்று நினைக்கவில்லை!
நீங்காது எனது நினைவுகள் உனக்கிருக்கும் என்று நினைக்கவில்லை!
நீளும் பல இரவுகளில் என்னை நட்சத்திரங்களாக பார்ப்பாய் என்று நினைக்கவில்லை!

நான் நினைப்பது;
உனக்குள் நான் இல்லை என்றானாலும், நீ நீயாக இருப்பதையும்!
எனக்குள் நீ எப்போதும் நிறைந்து இருப்பதையும் ...

ஏனிந்த வேறுபாடு ...?

உன்னை நினைக்கும் நொடிகள் ...
மனதிற்குள் ஒரு மயக்கம் !
நீ பேசுவதாய் நினைத்து சிற்சில ஒத்திகைகள் எப்போதும்...

உன்னை ரகசியமாய் எனக்கு வெளிப்படுத்தும் நொடிகள்...
மனதிற்குள் ஒரு மயக்கம் !
நீ அருகே இருப்பாய் என்றெண்ணி காற்றை சிறைபடுத்தும் கைகள் எப்போதும்...

உன்னை அருகில் பார்க்கும்போது மட்டும்...
மயக்கத்தை விடுத்து சிலுப்பி நிற்கின்றதே நன்றிகெட்ட மனம்!
எனையறிந்த மனம்தானே என்ற நினைப்போ...

உன்னை விட்டு தூரமாய் வரும் நொடிகள்...
மறுபடி ஏங்குதே மனம்!
மீண்டும் உனை காணும் நொடிகளை எண்ணி !...

புரிந்துகொள்வாயா..?

புரிந்துகொள்வாயா..? உன் கோபம் எனை தடுமாற வைக்கின்றதை !

புரிந்துகொள்வாயா..? உன் ஸ்பரிசம் எனை எனக்கு உணர வைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் அருகாமையை நான் பொக்கிஷமாய் நினைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் சீண்டல்கள் எனை சிரிக்க வைப்பதை !
புரிந்துகொள்வாயா..? உன் சிறிய பிரிவுகளும் எனை சோகமாக்குவதை !
புரிந்துகொள்வாயா..? உன் வார்த்தைகள் எனக்குள் மாற்றம் உண்டாக்குவதை !
புரிந்துகொள்வாயா..? உன் நட்பு இல்லாமல் போனால் எனக்கு என்னாகும் என்பதை !

Monday, April 21, 2008

உனக்கான என் பயணம் ...

வரும் வழியில் உன்னை நினைத்துக்கொண்டே வந்தேன் !
மனதில் மகிழ்ச்சி பொங்கியது ...
ஒவ்வொரு முறை உனை பார்க்க வரும்போதெல்லாம் ;
மனதில் நிகழும் மாற்றங்கள்...
கடைசியாக உனை எப்பொழுது பார்த்தேன் ??!!
சரியாக சொல்ல வேண்டுமென்றால் ...!
நேற்று உன் கைகளை பிடித்து ஆடிக்கொண்டே வந்தேனா...??!
நினைவிற்கு வந்து எனை தனிமையில் சிரிக்க வைத்தது ..!!
சிக்னலுக்காக நின்றிருந்த என்னருகே இருந்தவர் எனை வித்யாசமாய் நோக்க ....
நான் ஏன் இப்படி மாறிப்போனேன் ...!!

Tuesday, April 15, 2008

ஐக்கியமாகிவிட்டேன்...

வலை உலகில் என் ஜனனம்...

கவனித்தேன் ...!
களித்தேன் ...!
பிறர் கவனிக்க என் பதிவுகளை !
வலையுலகில் ஏற்றிட முன்வந்துவிட்டேன் ...